பத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்

பிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை நிறைவு நாளை வரும் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி மாசி மாதம் வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தமிழ்,கலை பண்பாட்டுத் துறைகளின் முன்னோடிகள் பலர் இந்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கல்விக்கூடத்தில் கல்வி கற்கும் சிறார்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்கள் அரங்க நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள்.

முற்பகல் 11 மணிக்கே ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு மாலை வரை சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடன் நகரும் என்று விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அண்மையில் வதியும் அனைத்து தமிழ் மக்களும் நிகழ்வுக்கான வரவுடனான ஆதரவை கொடுத்து இளம் தலைமுறையினரின் அரங்க நிகழ்விற்கு உற்சாகம் கொடுக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *