வேம்படி மகளிர் மாணவி அகில இலங்கையில் சாதனை

இலங்கையில் நேற்றையதினம் வெளியாகியுள்ள கபொத சாதாரணதர பரீட்சை முடிவுகளில் பல பாடசாலைகளும் தங்கள் சாதனைகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரீட்சை பெறுபேறுகளில் யாழ் மாவட்ட வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி மிருதி சுரேஷ்குமார் தனது அதிதிறமை சாதனையை இந்த தடவை பதிவு செய்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – 2018 இல் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினையும் தமிழ் மொழிப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆங்கில மொழி மூலம் மற்றும் தமிழ் மொழி மூலம் என இரண்டு வகைப்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி மூல நடந்த பரீட்சையில் சகல பாடங்களிலும் A தர சித்தியை பெற்று முதல் தர மாணவியாக தன்னை நிலைப்படுத்தி தமிழர் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

http://www.vetrinadai.com/news/chithambara-maths-challenge-2018-exams/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *