பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நலம் பெற இசைரசிகர்கள் உலமெங்கும் பிரார்த்தனை

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த பாடகர்களில் பாடும்நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனித்துவமான இடத்தை பெறுபவர். தமிழ்,ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு கன்னடா என்று பலமொழிகளிலும் பாடி புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி அவர்களை கொரோனா தொற்று கடந்த வாரத்திலிருந்து ஏற்பட்டு மிகவும் ஆபத்தான கட்டங்களை அவர் நெருங்கி வருகின்றமை ரசிகர்களை மிக அதிச்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது..

அதை தொடர்ந்து அவர் பூரண குணமாக வேண்டி இதில் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.அத்தோடு உலகெங்கும் இருக்கும் பல கலைஞர்களும் பாடும் நிலாவுக்காக தங்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையை சேர்ந்த இசைக் கலைஞர்களும் இன்று இலங்கை தமிழ் இசைக்கலைஞர்கள் சார்பில் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்

.உலகமெங்கும் பல லட்சக்கணக்கான ரசிகர்களைகொண்ட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எல்லா நலமும் பெற்று மீண்டு வரவேண்டுமென்று வெற்றி நடையும் இசை ரசிகர்களோடு இணைந்து பிரார்த்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *