சர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி

சர்வதேச கபடி போட்டியில் பங்குபற்றுவதற்கு வடமாகாணத்திலிருந்து மிகச்சிறந்த அணியொன்று பங்குபற்றவுள்ளது.

வடமாகாண அனைத்து மாவட்டகளிலிருந்தும் இதற்கு முன்னர்  நடைபெற்ற போட்டிகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட மிகத்திறன் வாய்ந்த அணிவீரர்களை உள்ளடக்கியதாக கபடி அணி உருவாக்கப்பட்டுள்ளது. பல  முன்னணி கழகங்களிலிருந்தும் பல அணிவீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச சுற்றுப் போட்டிகளில் இந்தியா,மலேசியா,மாலைதீவுகள் ,நியூசிலாந்து, பூட்டான் போன்ற நாடுகள் இந்த கபடிப்போட்டிகளில் மோதவுள்ளது.

 

அண்மைய நாள்களில் வடமாகாண வீரர்கள் அகில இலங்கை ரீதியில் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் இந்த சர்வதேசப்போட்டிகள் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *