தமிழ்நாட்டில் மறுக்கப்படும் உரிமைகளுக்காக லண்டனிலும் அறப்போர்

லண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டி இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போராட்டமாக நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

தொப்புள் கொடி உறவுகளுக்காக ஈழத் தமிழர்களும் பெரும் அணியாகத் திரண்டு தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்துவர் என்று  எதிர்வுகூறப்படுகிறது.

அறப்போராட்டம் நடைபெறும் இடம்: இந்திய தூதுவரகம், India House, London WC2B 4NA

காலம்: 15-04-2018 காலை 11-00 முதல் பி. ப 2-00 வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *