தமிழ்நாட்டு காவல்துறை அராஜகத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்

மிலேச்சத்தனமாக  சூடு நடத்தி மக்களை கொன்ற தமிழ்நாட்டு காவல்துறையின்  அராஜக நடவடிக்கையை கண்டித்து லண்டனில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் அமைப்புக்களால்  அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உயிரை தமிழ் காவல்துறையினரே பறித்தெடுக்கும் துர்ப்பாக்கியமான சூழல் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடந்தேறியிருக்கும் நிலையில் மக்கள் பல ஆயிரமாக கூடி எதிர்ப்பை வெளியிடவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு  கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா? என்று தமிழர்கள் தரப்பில்  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலவரமாக மாற்றி
எம் தொப்புள்கொடி உறவுகளை 9 தமிழர்களை  படு மோசமாக கொலைசெய்த இந்திய, தமிழக காவல்துறைகளின் அநியாய சதிக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியிற்கு அனைவரையும் ஒன்று திரளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

இடம் :India House, Aldwych
London
WC2B 4NA
காலம்:23 May 2018
நேரம்  :பி.ப 4.00
Nearest station – Temple station.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *